Show all

பீகார் முதல்அமைச்சர் நிதிஷ் குமாரை நோக்கி ‘ஷூ’ ஒன்றை வீசினார் கூட்டத்தில் இருந்த ஒருவர்

பீகார் முதல்அமைச்சர் நிதிஷ் குமார் நேற்று தனது சொந்த ஊரான பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, நிதிஷ் குமாரை நோக்கி ‘ஷூ’ ஒன்றை வீசினார். அது மேடைக்கு அருகில் போய் விழுந்தது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

 

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனே அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கே.ராய் என தெரிய வந்தது. தனது நீண்ட நாள் கோரிக்கையை முதல்அமைச்சர் நிறைவேற்றாத ஆத்திரத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதைத்தொடர்ந்து அவர் பக்தியார்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் நிதிஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.