Show all

காங்கிரஸ் பிரசாரப் பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தார்

பீகார் மாநிலத்தில் ராகுல் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரசார பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளன. நிதிஷ், லாலு கூட்டணியில் காங்கிரஸ் பங்கு கொண்டுள்ளது. இந்நிலையில் மேற்கு சம்ப்ரான் மாவ்டடத்தில் ராகுல் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில் நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்து கொண்டிருப்பதால் ராகுல் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் மாற்று கட்சியினர் கூறுவதை போன்று திட்டமிட்டு பேரணியை புறக்கணிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.