Show all

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க....

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க,அந்த வளர்ச்சியை தடுக்கும் விதமாக 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடையில் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க, அந்த வளர்ச்சியை முடக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.

மக்கள் தேர்தலில் எங்களுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒடுக்கப்படுகிறது.

தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிகள் நாடாளுமன்றத்தில் தங்கள் சார்பில் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எழுப்ப வேண்டும் என நிர்பந்திக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கு ஜனநாயகம் என்றால் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய தருணமும் வந்துவிட்டது என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.