Show all

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது.

எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்றை சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம் எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது. தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்கள் அந்த எலிகளை இயக்கும் ராணுவ வீரர்களுக்கு தெரியவரும். இது போன்று ஒரு மாபெரும் ‘எலி ராணுவப் படையை, உருவாக்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ரஷியாவின் ரோஸ்டவ்-ஆன்-டன் நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.