Show all

பரிசு 72,00,000! மிடுக்குப்பேசி பயன்படுத்த மாட்டேன் போட்டி

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிடுக்குப்பேசி அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ.72 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

விட்டமின் வாட்டர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: மிடுக்குப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக அந்த வகை பேசி இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கீச்சு அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் கேள்விக்கான விடைகளுடன் #nophoneforayear  மற்றும் #contest என்பதையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். 

வரும் 08,சனவரிக்குள் தங்களது பதில்களை பதிவிட வேண்டும். நிறுவனத்தின் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் வசதி கொண்ட செல்பேசி வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒரு ஆண்டிற்கு அதாவது 365 நாட்களுக்கு நிறுவனம் வழங்கும் பேசியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். 

இவை தவிர மடிக்கணினி, மேசைக்கணினி, அமேசான், அலெக்சா, கூகுள் ஹோம் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் மிடுக்குப்பேசி, டேப்லெட் களை பயன்படுத்தக் கூடாது. போட்டியாளர்கள் 22,சனவரிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான செல்பேசி வழங்கப்படும். 

ஒருஆண்டு முழுவதும் மிடுக்குப்பேசி பயன்படுத்தப்படவில்லை என்பதை அந்நிறுவனம் நடத்தும் உண்மை கண்டறியும் சோதனைக்குப்பின்பே பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.