Show all

வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்.

அசுரா புனித தினமான நேற்று வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார்.

90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இரவு 1.30 மணியளவில் அங்குள்ள ஷியா பிரிவினரின் முக்கிய பிரார்த்தனை மையமான 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கட்டிடம் ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது. இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இசுலாமிய பயங்கரவாதிகளால் அங்கு அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.