Show all

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில், இந்தியாவின் 9 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இந்தத் திடீர் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர்.

சம்பா மாவட்டத்தின், பசந்தர் மற்றும் டர்னா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியிகளில் இரவு முழுவதும் கடும் சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றும், பொதுமக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் கம்பிவேலிகள் பழுதடைந்ததை பயன்படுத்தி கொண்டு இந்த திடீர் தாக்குதலைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தியுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் துணை முதல்-மந்திரி நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.