Show all

சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு

சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

2 கிலோ சமையல் எரிவாயு உருளையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், கிராமப்புறங்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைவார்கள்.

இங்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ள புதிய வசதியைப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்புகள் கோரி விண்ணப்பிக்கலாம். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் 48 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளரின் வீட்டின் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முகவர் 3 முதல் 4 நாள்களில் சமையல் எரிவாயு உருளையை அளிப்பார் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.