கருப்பினத்தவர், இஸ்லாமியர்கள், பெண்கள், என சகல தரப்பினரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் டொனால்டு டிரம்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது இந்திய தேயிலை நிறுவனம் ஒன்று. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக நிற்கும் கோடீஸ்வரர், ரியல் எஸ்டேட், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள் என பணம் கொழிக்கும் டிரம்ப். அவ்வப்போது திவால் நோட்டிசுகளையும் அனுப்பி வங்கிகளை அதிரச் செய்தவர். இப்படிப்பட்ட டொனால்டு டிரம்பை கலாய்க்க கொல்கத்தாவில் இருக்கும் தேயிலை நிறுவனம் ஒன்றுக்கு வித்தியாசமான யோசனை உதித்துள்ளது. ஆவேசமாகவும், அதிரடியாகவும், பேசி அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள டிரம்ப்பின் உடலும், மனதும் சாந்தியடைய 60,000 பசுமை தேநீர் பொட்டலங்கள் அனுப்பியுள்ளது இந்த நிறுவனம். கொல்கத்தாவில் இருந்து நேரடியாக நியூயார்க்கில் இருக்கும் டிரம்ப்பின் அடுக்குமாடி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன தேநீர் பொட்டல மூட்டைகள். டிரம்ப் அவர்களே பசுமைதேநீர் குடிப்பது உங்களுக்கு நல்லது. மனதை தூய்மையாக்கவும், உடலை பிட்டாக வைக்கவும் பசுமைத்தேநீரால் முடியும். அத்துடன் அது அமெரிக்காவுக்கும், ஏன் உலகத்திற்கே நல்லதாக இருக்கும் என்ற பொருள்படும் வாசகங்கள் நியூயார்க் வீதிகளில் மிண்ணி மறைகின்றன. பசுமை தேநீர் தினமும் 3 கோப்பைகள் வீதம் குடிக்குமாறு டிரம்புக்கு அறிவுரையும் கூறப்படுகிறது. அதனால் 6 ஆயிரம் பொட்டலங்கள் 4 ஆண்டுகளுக்கு வரும். அத்தனையும் இலவசம் வேறு. டி பார் டிரம்ப் என்று பெயரிடப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வித்தியாசமான முயற்சி அமெரிக்காவில் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.