04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்தப் பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க முயற்சியாகும். சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் இந்த சாலை இடம்பிடித்து இருந்தது. அதை சரி செய்ய இந்த பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்தப் பாலம் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 22.9 கிலோ மீட்டர் பாலம் கடலிலும், 6.7 மீட்டர் தரையிலும், மீதமுள்ள தூரம் பேர்ல் ஆற்றின் மீதும் செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் அதிக அளவு துருப்பிடிக்காத எஃகு இருப்பு மூலம் கட்டப்பட்டது. மொத்தம் 4 லட்சம் டன் இரும்பு இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட எல்லா விதமான இயற்கை பேரிடர்களிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயணிக்க மொத்தம் 45 நிமிடம் மட்டுமே ஆகும். முன்பு பாலம் இல்லாமல் சுற்றி செல்ல 3 மணி நேரம் வரை ஆகி இருக்கிறது. இந்த பாலத்தை கட்ட 8 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கடலுக்கு நடுவில், பாதுகாப்பிற்காக பெரிய செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த தீவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலத்திற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. இந்த பாலம் வரும் புதன்கிழமையன்று திறக்கப்பட உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,947.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.