25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்பன் மகன் இருவரும் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிசேனாவைக் கழட்டி விட்டார்கள். ஆம் ராஜபக்சேவும், நமல் ராஜபக்சேவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்கள். எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக தலைமை அமைச்சர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான கூட்டணி ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தல் வெற்றிக்காக பல கட்சிகள் இணைந்து இந்த கூட்டணி அமையவுள்ளதாகவும் மகன் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,968.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.