தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்த கருத்துக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ள வெளியான செய்திகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவர் பெயரில், வெளியான செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சம்மந்தமே இல்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தலைமைக் கழகத்திலே உள்ளவர்கள் பேட்டி அளிப்பதும், செய்திகளைக் கொடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல. திமுக பற்றி டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதால், கழகத் தோழர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.