Show all

கோத்தபயாவிடம் கோரிக்கை: அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் அர்னால்ட்

இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் ருசல் அர்னால்ட் தனது கீச்சுப் பதிவின் மூலம், இலங்கை அதிபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபயவிற்கு- இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் ருசல் அர்னால்ட் தனது கீச்சுப் பதிவின் மூலம் அமைதி, வளர்ச்சி, ஒற்றுமை அதை எங்களுக்கு தாருங்கள்; தருவீர்கள் என்றே நம்புகிறோம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் ருசல் அர்னால்ட் தனது கீச்சுப் பதிவை கோத்தபயாவோடு நாமல் கீச்சுப் பதிவுக்கும் முன்னெடுத்துள்ளார்.  

ஒட்டுமொத்த உலகினரும் கூட இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களிடம் அதைத்தாம் எதிர்நோக்கவும் வேண்டவும் செய்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,341.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.