Show all

தீவிரவாதிகளை அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கர தீவிரவாதிகளை அந்நாட்டின் அனுமதியை பெறாமலே அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.

அவ்வகையில், முதன்முதலாக உள்நாட்டு தயாரிப்பான ‘புராக்’ ஆளில்லா விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள ஷவால் பள்ளத்தாக்குப் பகுதியில் இன்று தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது தாக்குதல் நடத்தி மூன்று தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சுமார் பத்தாண்டுகளாக பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திவரும் அதிரடி குண்டுவீச்சு தாக்குதலில் சுமார் 2400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.