Show all

உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை

உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். மற்றொருவர் காயம் அடைந்து உள்ளார்.

மூன்று மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் மற்றும் இரத்த கறை படித்த கத்தி உக்ரைன் நாட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. துரதிஷ்டவசமாக உழ்கோரோட் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் 3 உக்ரைன் நாட்டவர்களால் கத்தியால் குத்தப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தில் இந்திய மாணவர்கள் பிரானாவ் சயின்தில்யா மற்றும் அன்குர் சிங் உயிரிழந்துவிட்டனர். இதில் காயம் அடைந்த மாணவர்  இந்திரஜித் சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உக்ரைன் நாட்டவர்களிடம் இருந்து மாணவர்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசிஉள்ளதாக கூறிஉள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சடலங்களை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறிஉள்ளது. இவ்விவகாரத்தை உக்ரைன் வெளியுறவுத் துறையிடம் எடுத்து சென்றுஉள்ள இந்திய தூதரகம், இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திரஜித் சிங் அளித்த வாக்குமூலத்தின்படி 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.