Show all

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கலைப்பு.

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அக்கட்சியின் அரசியல் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மகாராஷ்டிரா மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மயாங்க் காந்தி, கெஜ்ரிவால் தனது தேவையற்ற அரசியல் நடவடிக்கைகள் காரணமாக கட்சியை நரகத்துக்கு அழைத்து செல்கிறார் என்று கருத்து கூறியிருந்தார்.

இதன் எதிரொலியாக மகாராஷ்டிராவில் இக்கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்படுவதாக, கட்சியின் அரசியல் பாதுகாப்பு கமிட்டி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.