இலங்கைத் தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வருவது அவசியம் என முதல்வர் கூறியுள்ளார். தனது கருத்தையே சட்டமன்றத் தீர்மானம் வலியுறுத்துவதால் தீர்மானத்திற்கு ஆதரவு. இலங்கை போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். சுதந்திரமான நம்பகமான விசாரணை வேண்டும். தமிழினப் படுகொலையை மறைத்து விசாரணையை இலங்கையிடமே ஒப்படைக்க அமெரிக்கா முயல்கிறது. வரலாற்று நிகழ்வுகளை திரிக்கும் அமெரிக்க அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.