Show all

அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள்

ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா - ஹங்கோரியின் புடாபெஸ்ட் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை நடத்தி கன்டெய்னரை சோதனையிட்டனர். நன்கு குளிர்விக்கப்பட்ட நிலையில் இருந்த கன்டெய்னர் உள்ளே 70 பேரின்சடலங்கள் கிடந்தன. இறந்தவர்கள் அகதிகளா அல்லது சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களா? என விசாரணை நடக்கிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.