Show all

தொடர்ந்து மோசமாக ஆடும் ரோகித்சர்மா மற்றும் ஹர்பஜன் சிங்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த ஹர்பஜன் சிங் நடந்து முடிந்த இலங்கை டெஸ்ட் போட்டியில் பெரிதாக சோபிக்காததால், அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்களின் சுழற்பந்து வீச்சில் சிக்கி படுதோல்வியை சந்தித்துள்ளது. இப்போட்டியில் மூத்த வீரர் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. 25 ஓவர்கள் பந்துவீசிய ஹர்பஜன் சிங் 90 ரன்களை வாரி இறைத்துள்ளார். ஆனால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருப்பது வேதனையான விஷயம்தான்.

அதேபோல் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. காலே டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 9 ரன்னும், 2–வது இன்னிங்சில் 4 ரன்னும் எடுத்தார். இதற்கு முன்பு ஆடிய வங்காளதேச டெஸ்டில் 6 ரன்களே எடுத்தார். இதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் அவரது ஆட்டம் சிறப்பாகவே இல்லை.

இதனால் இவர்களின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.