Show all

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 11 வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ள சீனா வீராங்கனை LI Xuerui வுடன் பலபரீட்சை நடத்தினார். 50 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து கைப்பற்றினார். பின்பு சுதாரிப்பாக விளையாடிய லீ இரண்டாவது செட்டை 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தை சமன் படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை அபாரமாக விளையாடிய சிந்து 21-17 , என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதே போல் நடைபெற்ற மற்றொரு 3வது சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை தஹாஹசியை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா, 21-18, 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.