Show all

ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை

சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் ‘பார்’கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த ‘பார்’கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த ‘பார்’கள், மற்றும் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த ‘பார்’கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட ‘பார்’கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்கவேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.