Show all

கூகுள் தலைவராக சுந்தர் பிச்சை தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்

1972-ல் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. சென்னை, அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர்.

2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். ‘இன்னொரு பிரவுஸர் தேவையா?’ என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியக்கவைத்தவர். இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பரியது. கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட்,

கூகுள் இரண்டிலுமே தற்போது சிஇஓ பதவியை வகிப்பது இந்தியர்கள் தான். உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை. ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம் மட்டுமே ஈட்டக்கூடிய கூகுள் நிறுவனர் லாரி பேஜ்-க்கு அடுத்த இடத்தில் இருந்து வந்த சுந்தர் பிச்சை தற்போது அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகவும் அறியப்படாத மேலாளராக இருந்து படிப்படியாக சுந்தர் பிச்சை பதவி உயர்வு பெற்று வந்திருக்கிறார். தலைவர், துணைத்தலைவர் என்று பதவி உயர்வு பெற்றார். அந்நிறுவனத்தின் தலைவர் லாரி பேஜ்-க்கு அடுத்த இடத்தில் இருந்த சுந்தர் பிச்சை தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனம் அதனை சீரமைப்பு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையை தலைமை செயல் அதிகாரியாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே அந்த பதவியில் கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சையின் வளர்ச்சியையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கண்டு தாங்கள் வியந்ததாக லாரி பேஜ் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் பிச்சையின் திறமையை மிகவும் பாராட்டுகிறார்கள். சுந்தர் பிச்சையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சக ஊழியர்கள் பெருமையோடு குறிப்பிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.