Show all

உலக பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் தொடங்கியது

உலக பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடங்கியது.

22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இன்று தொடங்கி, வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. 38 ஆண்டுகால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது.

பி.வி.சிந்து இரண்டு வெண்கலமும், அஸ்வினி-ஜூவாலா கட்டா ஜோடி, பிரகாஷ் படுகோனே ஆகியோர் தலா ஒரு முறையும் வெண்கலம் கைப்பற்றி இருக்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த இந்திய புயல் சாய்னா நேவால் இந்த போட்டியில் இதுவரை ஒரு பதக்கமும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.