Show all

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார்.

இலங்கை நிதிஅமைச்சர் கருணநாயகே கொழும்புவில கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து அவர் புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு 2 வாகனங்களில் வந்த சிலர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் பலியானதாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.