Show all

ஒலிம்பிக் உலக வில்வித்தை போட்டிக்கு தகுதி பெருவார மங்கள் சிங்

உலக வில்வித்தைப் போட்டியில் விளையாடி வரும் இந்தியாவின் மங்கள் சிங் ஒலிம்பிக் வாய்ப்பில் நீடிக்கிறார்.

டென்மார்க்கில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் "ரீகர்வ்' பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மங்கள் சிங் சாம்பியா வெற்றி பெற்றார். இதன் மூலம் தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் அவர் நீடிக்கிறார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, லட்சுமிராணி மஜ்ஹி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மங்கள் சிங், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்வரினோ கார்சியாவை எதிர்கொள்கிறார். இதேபோல லட்சுமிராணி, தீபிகா குமாரி ஆகியோர் சீன வீராங்கனைகளை எதிர்கொள்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.