அப்துல் கலாமின் மறைவு மூலம் தேசம் ஒரு உண்மையான தேசியவாதியையும், தொலைநோக்கு சிந்தனையுள்ள சிறந்த விஞ்ஞானியையும் இழந்துவிட்டதாக மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு தனது சிறந்த மகனை இழந்துவிட்டதாகவும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை ஆராய்ச்சியில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய ஏவுகணை நாயகன் என அழைக்கப்பட்ட அப்துல்கலாம் முக்கிய பங்கு வகித்ததாகவும் அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.