Show all

சீனாவில் இயங்கி வந்த போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவில் இயங்கி வந்த போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் அழிக்கப்பட்டது.சமூக வலைதளத்தில் இந்த தொழிற்சாலை பற்றி செய்தி வெளியானதை அடுத்து கடந்த மே 14ம் தேதி போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி தொழிற்சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.பழைய ஐஃபோன்களை பயன்படுத்தி புதிய போலி ஐஃபோன்களை தயாரித்து வந்ததாக இதன் உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த போலி தொழிற்சாலை, இன்று காவல்துறையினரால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.