Show all

ஹிகன் ஷாவை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் தாம்பே, ரஞ்சி போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட அணுகியதாகவும், ஆனால் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் பி.சி.சி.ஐ.யிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் தாம்பேவை அணுகியது ஹிகன் ஷா என்ற வீரர் என்று அதிரடியாக அறிவித்த பி.சி.சி.ஐ., அவரை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் புகார் செய்த வீரர் யார் என்பதை பற்றி எதுவும் சொல்லவில்லை. எனினும் புகார் சீதா வீரர் சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் தாம்பே என தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் பயிற்சி விஷயமாகத்தான் பிரவீண் தாம்பேவை அணுகினேன். பி.சி.சி.ஐ.யின் இந்த நடவடிக்கை எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நான் எந்தவிதமான முறைகேடான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. நான் பி.சி.சி.ஐ.க்கு பதில் அனுப்பியுள்ளேன். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

ஹிகன் ஷா இதுவரை மும்பை அணிக்காக 37 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.