Show all

எகிப்தில் உள்ள இத்தாலி தூதரகத்தில் குண்டுவெடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவின் மத்திய பகுதியில், இத்தாலி துாதரகம் அமைந்துள்ளது. இந்த துாதரக கட்டட வாயிலில் நிறுத்தியிருந்த கார் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள், காரில் குண்டு வைத்து, 'ரிமோட்' மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பில், துாதரக வாயில் சுவர்கள் பெயர்ந்து விழுந்தன.

தரையில் பள்ளம் ஏற்பட்டு, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் உடைந்தன. இதனால், துாதரகப் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.