ஆதிதிராவிட மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 சதவீத நிதியில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளதாகவும் மீதி நிதியை வேறு பொதுவான திட்டங்களுக்கு செலவிடுவதாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எல்.புனியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதல் 5 மாநிலங்களுக்குள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே ஆதிதிராவிட மக்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவதாக இதனை பேஸ்புக் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.