Show all

ஆப்கன் - தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இஸ்லாமாபாத் அருகிலுள்ள முர்ரீ நகரில், ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கும், தலிபான் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆப்கன் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததை பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக அறிவித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.