Show all

ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்

எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிர்மின்காம் நகரில் செயல்பட்டு வரும் எச்.எஸ்.பி.சி வங்கி தன்னுடைய ஊழியர்கள் 6 பேருக்கு வங்கி நிர்வாகத்தை செயல்படுத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு 6 பேரும், வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் உடை அணிந்து வன்மத்தை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.