Show all

தீவனம் திருடியதாக இளைஞரை கொன்ற பொதுமக்கள்

அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தனது வாகனத்தில் கால்நடைத் தீவனங்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் சிலர் அந்த வாகனத்தை நிறுத்தி தீவனம் வாங்கியதற்கான ரசீதை காண்பித்துவிட்டு செல்லுமாறு கூறினர்.

ஆனால் தீவனம் வாங்கியதற்கு ரசீது அந்த இளைஞரிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரை கடுமையாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும் ஆவேசம் குறையாத பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.