Show all

காவல்நிலையத்தில் மரணம் மேட்டூரில் பரபரப்பு

நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலைகூடலில் திருநங்கைகள் நடனம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே தகறாரு மூண்டது.பின்னர் தனியாக வந்த பழனிசாமி-யை கழுத்தையருத்து கொலை செய்தனர் இதற்காக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் விசாரணைக்காக 5 பேரை அழைத்து வந்தனர் அவர்களை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது இதனால் அதில் கோகுலகண்ணன் என்பவருக்கு ஜன்னி ஏற்பட்டது அதற்காக மேட்டூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை கருமலைக்கூடல் மெயின்ரோட்டில் கூடியதால், திடீர் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க, சேலம், தர்மபுரி, ஈரோடு, எஸ்.பி-க்கள் தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.