Show all

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு வலியுறுத்தல்.

புல்லர் அப்துல் காதிர் போல 24ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராசீவ் கொலைக் குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை போதுமானது.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று ஐதராபாத் சிறையில் இருந்த அப்துல் காதிர், திகார் சிறையில் இருந்த டி.எஸ் புல்லர் மகாராட்டிரத்தில் உள்ள எரவாடா சிறையில் அடைபட்டிருந்த ஜய்புன்னிசா காசி ஆகியோர் விடுதலை செய்யப் பட்டது போல் ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜூ அவர்கள் தன்னுடைய இணையத்தள வலைப்பூவில் வலியுறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.