Show all

பேரறிவாளன் விடுதலையாவர் என்ற நம்பிக்கை, இன்றுடன் நூறு நாள் கடந்தது! தாய் அற்புதம்மாள்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் முடிவெடுக்கலாம்' என உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் 100 நாட்கள் முடிந்துள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைகுறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச அறங்கூற்றுமன்ற அமர்வு தீர்ப்பளித்ததையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டத்தின் முடிவில், சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள், வழக்கில் இத்தனை காலமாக நிகழ்ந்தவை உள்ளிட்டவை அடங்கிய கோப்புகள், அமைச்சரவையின் தீர்மானம், சட்டவிதி 161-ன் படியான கருணை மனு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழக ஆளுநரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக, உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டேவருகிறது. 

7 பேரையும் விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் உட்பட, பலரும் குரல்கொடுத்துவருகின்றனர். அந்த வகையில், பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் முதல்வர், ஆளுநரைச் சந்திப்பது, போராட்டங்களை முன்னெடுப்பது என விடுதலைக்காகப் போராடிவருகிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.