Show all

ஐய்யய்யோ என்று அதிர்ச்சி அடைய வைக்கும் திருமா புகார்! எந்தப் பொத்தானை அமுக்கினாலும் இரட்டை இலைக்கு விழுவதாக

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்த வேண்;டுகோள்:
தேர்தல் இப்போது அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் எந்திரங்கள் பழுதாகி இருக்கின்றன. சில இடங்களில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வருகின்றன.
இதுவரைக்கும் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகதான் செயல்பட்டு வந்தார்கள். இன்னைக்கு ஒருநாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இவருடைய சொந்த கிராமம் அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஆகும். இன்று வாக்கு பதிவு என்பதால், இந்த கிராமத்திற்கு வந்துள்ளார் திருமா.
அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இவருக்கு வாக்கு! அதனால் தன்னுடைய தாயார் பெரியம்மாவுடன் வாக்குச் சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்த வேண்டுகோள் தான் இது.
வாக்களிக்கும் வாக்காளர்கள் தயவு கூர்ந்து கவனிக்க: நீங்கள் வாக்களிக்கும் இயந்திரத்தில், வாக்களிக்க பொத்தானை அமுக்கும் போது, வலது பக்;கம் வைக்கப் பட்டுள்ள ஒரு சிறு கருவித்திரையில் நீங்கள் வாக்களித்த சின்னம் வெளிப்படும். தவறாமல் கவனித்து, நீங்கள் வாக்களிக்காத சின்னம் ஏதாவது வெளிப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவியுங்கள். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.