Show all

ஒரே நாளில் 175 தொழிலாளர்களைக் கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஒரே நாளில் 175 தொழிலாளர்களைக் கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!

சிரியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாகவும், அவர்களில் 175 பேரை ஒரே நாளில் கொன்று குவித்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சிரியாவின் தலைநகரமான டமாகஸில் இருந்து சுமார் 50 கி.மீட்டர் தொலைவில் பாடியாஹ் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளிகளை,  சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சிரியா ராணுவம் மூலம் பெறப்பட்ட  அதிர்ச்சி தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா  நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், கடத்தப்பட்ட 300 தொழிலாளிகளில் 175 பேரை ஒரே நாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை சிரியா தொழிற்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், திங்கள் கிழமை முதல்,  கடத்தப்பட்ட தொழிலாளிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.