Show all

ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு! பேருந்தில் பயணி தவறவிட்ட ரூ.2.47 லட்சத்தை ஒப்படைத்தனர்

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா நகர் பணிமனையைச் சார்ந்த 'தடம் எண் 114' பேருந்தில் நடத்துநர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை பணியில் இருந்தனர். அன்று இரவு 11 மணி அளவில் பேருந்தில் யாரோ ஒரு பயணி தவறவிட்டுச் சென்ற ரூ.2.47 லட்சம் ரொக்கத்தை திருமங்கலம் காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்தனர்.

நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் பணியாற்றிய அவர்கள் இருவரையும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், பல்லவன் இல்லத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். பரிசு வழங்கியும் கவுரவித்தார். வரும் குடியரசு நாள் விழாவிலும் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.