Show all

சான்றோன் ஆக்கும் கடமை அழைக்கிறது சீமானை! ஈன்று புறந்தருதல் கடமையை நிறைவேற்றினர் கயல்விழி

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கயல்விழி இணையர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சான்றோன் ஆக்கும் கடமை அழைக்கிறது சீமானை! ஈன்று புறந்தருதல் கடமையை நிறைவேற்றினர் கயல்விழி.

முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்தார். கயல்விழி கலைமுதுவர் பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனம் இளம்கிறித்துவர் சங்க அரங்கில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. 

சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எப்போதுமே தமிழுக்கு அதிக முதன்மை தருபவர் சீமான். அதனால் இவரது திருமணமும், தமிழ்முறைப்படி சீர்திருத்த திருமணமாக நடந்தது. தமிழின் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட காசுதாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார். 

சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.