Show all

மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200 பேர், கூடாது என்ற 12 பேர் கைது.

திருவண்ணாமலையில், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில், 'நமது உணவு நமது உரிமை” என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் தடையை மீறி, மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போலீசார் மற்றும் போராட்டம் நடத்தியவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்ததை போலீசார் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்று போராட்டம் நடத்த வந்த, பா.ஜ.க, வைச் சேர்ந்த, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.