Show all

பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம்! அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்க உயர் அறங்கூற்றுமன்றம் விதித்திருந்த, தடை அகற்றம்

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என உயர் அறங்கூற்றுமன்றம் தடை விதித்திருந்தது. 

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த உயர் அறங்கூற்றுமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது.

அறங்கூற்றுவர்கள் கூறுகையில், இலவச திட்டங்களை பயன்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். ஓட்டுக்காக மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதாக மக்கள் கருதுகிறார்கள். அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள போது மக்களை வரிசையில் காக்க வைப்பது சரியா என கருத்து தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.