சேலம் மாவட்ட தேமுதிக கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டதாக
தெரிவித்துள்ள மக்கள் தேமுதிக நிர்வாகி எஸ்.ஆர்.பார்த்திபன், விரைவில் தமிழகத்தில்
தேமுதிக என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 779 தேமுதிக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,
விஜயகாந்த் 500 கோடி ரூபாய் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். விஜயகாந்த் சினிமாவில் தான் ஹீரோ என்றும், நிஜத்தில் வில்லன்
என்றும் பார்த்திபன் கூறினார். அறக்கட்டளை மூலமாக விஜயகாந்த் செய்துள்ள பல நூறு கோடி ஊழல் குறித்து
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.