Show all

தான் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திக்கு தா.பாண்டியன் மறுப்பு

அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் மறுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளரிடம் பேசுகையில்,

என் மனைவிக்கு துணையாக இருக்கவே எனது மகன் சென்னை வந்துள்ளார் என்று கூறினார்.

மேலும், தனது மகன் டேவிட் ஜவஹர் சென்னை பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணி கேட்ட போது, பதிவாளர் பதவி கொடுக்கப்பட்டது.

துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து எனது மகன் விண்ணப்பம் எதுவும் கொடுக்கவில்லை என்றார்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி இருக்கும் என்றும் பாண்டியன் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.