பிச்சை எடுக்கும் பெண்களின் தோளில் எப்போதும் குழந்தைகள் தொங்கி
கொண்டிருக்கும். குழந்தைகளை வைத்து பசி என்ற வார்த்தையை உச்சரித்து பிச்சை எடுப்பது
வழக்கம். அதுபோல பிச்சை எடுக்கும் கூட்டத்துக்கு குழந்தைகளை வாடகைக்கு கொடுத்து அதை
ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். திருச்சி-மதுரை சாலையில் உள்ள ஒரு கிராமத்தில் இதுபோல பிச்சை
எடுக்கும் கூட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வாங்கி கொண்டு குழந்தைகளைப் பிச்சை
எடுப்பவர்களுக்கு வாடகைக்கு கொடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் கடத்தி வந்து பிச்சை எடுப்பதும் அதிகமாகி
கொண்டிருக்கிறது. வறுமை ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனைத்து தரப்பிலும்
கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்தத் தகவல் நமக்கு அறிவுறுத்துகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.