Show all

குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை.

சென்னை பல்லாவரம் நகராட்சி குறுக்குத் தெரு, பட்டேல் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி  நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை கலந்து வருவதாகவும் அதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் அப்பகுதி  பொதுமக்கள் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று புகார் தெரிவித்தனர்.இப்பகுதி மக்களுக்கு லாரிகளில் குடிநீர் வழங்கினாலும் அங்கு நிலத்தடி நீர் கெட்டு  போயிருப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். பெட்ரோல் வாசனை  கலந்து வருவதற்கு என்ன காரணம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து அவற்றை களைய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பல்லாவரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தொட்டியில் கசிவு ஏற்பட்டு, நிலத்தடி நீரில் பெட்ரோல்  வாசனை கலந்துள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.