Show all

அதிமுக வெற்றி பெற்றதால், சுண்டு விரலை வெட்டிக் கொண்ட அதிமுக தொண்டர் தங்கராஜ்

அதிமுக வெற்றி பெற்றதால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோயிலில் சுண்டு விரலை வெட்டிக் கொண்டஅகவை 50 உள்ள அதிமுக தொண்டர் தங்கராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகலூர்கேட் பகுதியைச் சேர்ந்தவர் கே.தங்கராஜ். இவர் மரக்கட்டில் வியாபாரம் செய்து வருகிறார். தீவிர அதிமுக தொண்டரான இவர், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

 இதனிடையே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக தோல்வி அடையும் என்ற தகவல் வெளியானதால், அதிர்ச்சியடைந்த தங்கராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள முனியப்பன் கோயிலில், ஜெயலலிதா வெற்றி பெற்றால் தனது விரலை வெட்டிக் கொள்வதாக வேண்டியதாகத் தெரிகிறது.

 இதையடுத்து தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து வௌ;ளிக்கிழமை காலை முனியப்பன் கோயிலுக்குச் சென்ற தங்கராஜ், இடது கை சுண்டு விரலை வெட்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

 உடனே, அங்கிருந்தவர்கள் அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.