Show all

துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் நன்றி

சென்னை மாநகரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் நன்றி தெவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளிலும் மக்களுடன் இணைந்து, மக்களின் நலனுக்காக, துப்புரவு பணியை மேற்கொள்ள திட்டமிட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனித நேயத்தோடு பொதுமக்களும், இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தேமுதிகவினடருன் துப்புரவு பணியில் ஈடுபட வேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற துப்புரவு பணியில் கலந்துகொண்ட இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சிவேறுபாடின்றி ஈடுபட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் துப்புரவு பணியை மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, துப்புரவு பணிகளை தன்னார்வத்துடன் செய்த தேமுதிகவை சார்ந்த மாவட்டம், பகுதி, வார்டு ஆகியவற்றின்  செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.