Show all

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்து வௌள அபாயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்ததைத் தொடர்ந்து, கிராமங்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் தீர்த்தகிரிவலசு ஏரி உடைந்தது. ஏரியில் நீர்நிரம்பியதை அடுத்து மதகில் கசிவு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஏரியின் கீழ்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாயக்கனுர், பள்ளத்தூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஏரி உடைந்ததால், அங்கிருந்து வெளியேறும் நீர் வயல்வெளிகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. ஏரிக்கரையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் முகாமிட்டு நிலையை கண்காணித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.