Show all

தமிழகத்தின் மிகக்குறைந்த வாக்குப்பதிவு தென்சென்னை 57.43 விழுக்காடுகள்! மக்களவை 70.9 சட்டப்பேரவை இடைத்தேர்தல் 71.62

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, ஒருவழியாக நேற்று நடந்து முடிந்தது. ரொம்ப நீளமாக முடிவுக்கு இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும். 
 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 70.90 விழுக்காடு வாக்குகளும், 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் 71.62 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தல்:  2-வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி உட்பட 19 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது. சித்திரைத் திருவிழா நடப்பதால் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 38 மக்களவை தொகுதிகளில் 70.90 விழுக்காடும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 71.62 விழுக்காடும் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75 விழுக்காடும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.43 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 
அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விசாரத்தில் கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தவிர மாநிலத்தில் வேறு எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது. 
தமிழகம் முழுவதும் 818 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1493 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பழுதானதால் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமானது. பழுதடைந்த இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒருசில வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் பலர் வேதனையுடன் திரும்பினர். 
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,127.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.